சுவாசக் காற்று சுத்தமாக இருக்க வேண்டும். அப்போதுதான் நுரை யீரல்கள் சிறப்பாக தமது கடமையை ஆற்றும். ஆனால் சுத்தமான காற்று அரிதாகிவிட்டது. தில்லி, சென்னை போன்ற நகரங்களிலும், தொழில் நகரங்களிலும் காற்றில் மாசு மிக அதிகமாக கலக்கிறது. ஆனால் இந்த கொரோனா வைரஸ் தொற்று நோய் தாக்கத்தால், இப்போது காற்று மாசு குறைந்திருப்பதாக சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள் சொல்கி றார்கள். மார்ச் மாதம் 25ஆம்தேதி முதல் அமலுக்கு வந்த பொது முடக்க மான ஊரடங்கு, இன்னும் கட்டுப்பாட்டு பகுதி களில் தொடர்கிறது. ஊரடங்கால் வாகன போக்குவரத்துகள் நின்று போய், அதே போல் தொழிற்சாலைகள் இயங்காமல் போயின. உணவு விடுதிகள், ஓட்டல்கள் மூடப் பட்டன. இதனால் காற்றில் நச்சுக் கலப்பது குறைந்து போனது.
இதுபற்றி பெங்களூருவில்உள்ள இந்திய அறிவியல் கழகத்தின் காற்று மண்டல பெருங்கடல் அறிவியல் மையத்தின் பேராசி ரியர் எஸ்.கே.சதீஸ் கூறுகையில், ஊரடங் கால் இந்தியாவில் காற்றின் தரம், குறிப்பாக நகர்ப்புறங்களில் நல்ல முன்னேற்றம் கண்டி ருக்கிறது. மோசம் என்ற நிலையில் இருந்து இப்போது திருப்தி அல்லது நல்லது என்ற நிலைக்கு காற்றின் தரம் மாற்றமடைந்து முன்னேறி உள்ளது. இதற்கு பிரதான காரணம், மனித செயல்பாடுகள் குறைந்து போனதுதான் என்கிறார் அவர். சராசரி யாக இந்தியாவின் தென்பகுதியில் துகள்க ளின் செறிவு 50 சதவீதம் முதல் 60 சதவீதம் வரை குறைந்து இருக்கிறதாம். தில்லி, உத்த ரப்பிரதேசம், பீகார், மேற்கு வங்காளம் உள்ளிட்ட இந்திய கங்கை படுகை பகுதியில் இது 75 சதவீதமாக உள்ளது என்கிறார் பேரா சிரியர் எஸ்.கே.சதீஸ். போக்குவரத்து வாகனங்கள், தொழிற் சாலைகள், பயிர்க்கழிவுகள் எரிப்பு, பிற கழிவுகள் எரிப்பு போன்றவைதான் காற்று மாசுவுக்கு முக்கிய காரணம் என அவர் கூறு கிறார். நகரங்களில் பாதிக்கும் மேற்பட்ட காற்று மாசுவுக்கு வாகனங்கள் வெளியிடு கிற புகைதான் பெரும் காரணம். ஊரடங்கின் போது பெரும்பாலான வாகன போக்கு வரத்து குறைந்து போய்விட்டது மற்றொரு காரணம் என்கிறார். மே மாதம் வெளியான ‘ஜியோபிசிக்கல் ரிசர்ச் லெட்டர்ஸ்” என்ற பத்திரிகையில் வெளியான 2 ஆய்வு முடிவு கள், கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவலை தடுப்பதற்காக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு, நைட்ரஜன் ஆக்சைடு உள்ளிட்ட 2 காற்று மாசு அளவு வெகுவாக குறைந்து விட்டதாக காட்டுகின்றன.
இந்தியாவில் செயற்கைக்கோள் தரவு களும் காற்றில் துகள்கள் அளவு குறிப்பிடத் தக்க அளவு சரிவு கண்டுள்ளதை காட்டு கின்றன. மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரி யத்தின் தரவுகளும் காற்றுமாசு குறைந்தி ருப்பதை படம் பிடித்துக்காட்டுகின்றன. காந்தி நகர் ஐ.ஐ.டி. பேராசிரியர் மணி குமார்சிங் இதுபற்றி குறிப்பிடுகையில் காற்று மாசுவை குறைப்பதற்கு எதிர் காலத்தில் இதுபோன்ற பொதுமுடக்கம் பயன்படும் என்கிறார். இந்த பொது முடக்கத் தால் நமது இயற்கை தாய் இயல்பு நிலை க்கு மீட்கப்பட்டிருக்கிறாள்; தில்லியில் குளிர் காலத்தின் போது நாம் கண்டிருக்கிற காற்று மாசு குறைப்பதற்கு எதிர்காலத்தில் பொது முடக்கத்தை முன்னெடுக்கலாம் என்று கூறுகிறார். கொரோனா வைரஸ் தொற்றால் சுற்றுச் சூழலில் ஏற்பட்டுள்ள விளைவுகளை இன்னும் யாரும் உண்மையான அளவுக்கு அறியவில்லை என்றாலும் அதை ஒரு பகுப் பாய்வின் மூலம் விளக்க முடியும் என்று சுற்றுச்சூழல் பொறியாளர் போஸ்.கே. வர்கீஸ் குறிப்பிடுகிறார். ஊரடங்கு நட வடிக்கைகள் காற்று மாசு அளவை குறைக்க உதவுவதுடன், எதிர்வரும் பருவ மழைக் காலத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என சொல்லப்படுகிறது. எனவே ஓசோன் துளையும் இயல்பாகவே சரியாவது போன்ற பார்க்க முடியாத விளைவுகளையும் இந்த பொது முடக்கம் ஏற்படுத்தி உள்ளது என்று குறிப்பிடுகிறார் போஸ் கே வர்கீஸ்.
விமான போக்குவரத்தை குறைத்ததால் துகள்கள் மிகப்பெரியளவில் குறைந்தன, காற்று மண்டலத்தின் மேல் பெரும் கார்ப்ப ரேட் ஆலையின் கரியமிலவாயு உமிழ்வுகள் குறைந்து இருக்கின்றன. தமிழகத்தில் காற்றின் மாசு அளவு குறித்து மாசுகட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வில், முதல் ஊரடங்கிற்கு முந்தைய காலமான மார்ச் 1 முதல் மார்ச் 23 வரை யிலான காலத்தில் காற்றுதரக் குறியீடானது சராசரியாக 61.5 ஆகவும், முதலாம் ஊரடங்கு காலமான மார்ச் 24 முதல் ஏப்ரல் 14 வரை யிலான காலத்தில் காற்று தரக்குறியீடு 42.3 ஆகவும், இரண்டாம் ஊரடங்கு காலமான ஏப்ல் 15 முதல் மே 3 வரையிலான காலத்தில் காற்று தரக்குறியீடு 29.3 ஆகவும் மாசு குறைந்திருந்தது தெரியவந்தது. மூன்றாம் ஊரடங்கானது சில தளர்வுக ளுடன் அமல்படுத்தப்பட்டதால் அந்த நாட்க ளில் மட்டும் காற்று தரம் 34.3 ஆக இருந்த தாக கண்டறியப்பட்டுள்ளது. ஊரடங்கிற்கு முந்தைய காலத்தில் 37.4 சதவிகித நாட்கள் மட்டுமே காற்று தரக் குறியீடானது நல்ல நிலையில் இருந்ததாகவும் முதலாம் ஊரடங்கு காலத்தில் 78.6 சதவிகிதம் காற்று தரக் குறியீடு நல்ல நிலையில் இருந்ததாக வும் இரண்டாம் ஊரடங்கு காலத்தில் 94.7 சதவிகிதம் காற்றின் தரம் நல்ல நிலையில் இருந்ததாகவும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமல் படுத்தப்பட்டதால், வாகன போக்குவரத்து, தொழிற்சாலைகள் திறக்கப்பட்டன. இதனால் மீண்டும் காற்று மாசு அதி கரித்த நிலையில் கடந்த ஜுன் 19ம் தேதி முதல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் முழு ஊரடங்கு மீண்டும் அமல்படுத்தப் பட்டுள்ளது. இதனால் மீண்டும் காற்று மாசு குறைந்து வருவதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. மேலே குறிப்பிட்டுள்ள சுற்றுச்சூழல் வல்லுநர்கள் கூறுவது போல காற்று மாசு கட்டுப்படுவதற்கு ஊரடங்கு மட்டுமே நிரந்தர தீர்வாகி விடுமா? காற்று மாசு பாட்டிற்கு அடிப்படை காரணமாக கண்டறி யப்பட்டிருப்பது மிகப் பெரும் கார்ப்பரேட் ஆலைகள் வெளியிடுகிற பசுங்கூட வாயுக் கள் எனப்படும் கரியமில வாயு கழிவு களே. இதை கட்டுப்படுத்தி, மக்கள் வாழ்விய லுக்கு ஏற்றவாறு ஐ.நா.சபையின் காலநிலை மாற்ற மாநாடு மற்றும் உடன்படிக்கைகளின் வரையறுக்கப்பட்டுள்ள விதிகளை அனைத்து நாடுகளும் பின்பற்றுவதே தீர்வு.